Our New Website Please Visit

Saturday 10 January 2015

10th STANDARD TAMIL PAPER II MODEL PUBLIC EXAM 2015

                    LEAD BY KNOWLEDGE COACHING CENTRE AND TUTORIAL 
                                              TAMIL PUBLIC  MODEL EXAM -2015                                       




                                                                                                    பதிவு எண்

                                                   தமிழ் - இரண்டாம்   தாள்
                                                 Language - Part A - Tamil - Paper II
                  (இலக்கணம், துனைபடாம்,கடிதம்,கட்டுரை,மொழிப்பயிற்சி )

நேரம் : 2.30 மணி ]                                                                [ மொத்த மதிப்பெண் : 100

அறிவுரை :   (1)  அனைத்து வினாக்களுக்கும் சரியாக அச்சுப் பதிவாகி  உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும் . அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காநிபாளரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.
     
                         (2) நீலம் அல்லது கருப்பு  மையினை மட்டுமே எழுதுவதற்கு     பயன்படுத்த வேண்டும்

குறிப்பு : (1)  இவ்வினத்தாள் நான்கு பிரிவுகளைக் கொண்டது.
                   (2)  விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும்
                       அமைதல் வேண்டும்.
                   (3)  வினா எண் 38-க்கு என படிவம் ஒன்று தனியாக
                       வழங்கப்பட்டுள்ளது அதை நிரப்பி முதன்மை விடைத்தாளுடன்
                       இணைக்கவும்.

                                                                 பிரிவு - I
                                                    ( மதிப்பெண்கள் : 20)
                                  அனைத்து வினாகளுகும் விடையளிக்க.

                                                                பகுதி - 1
 உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                                   5 x 1= 5
1. பல் + தீது என்பது ------------- எனப் புணரும் 
   (அ ) பல்தீது               (ஆ) பஃறீது        (இ)பலதீது 
2. மாடு என்னும் சொல் ------------ ஆகும் 
   (அ) உயர்திணைப் பொதுப் பெயர்
   (ஆ)அஃறிணைப்  பொதுப்  பெயர் 
   ( இ) விரவுப்பெயர் 
3. மருதநிலத்திற்குரிய தெய்வம் --------------
   (அ ) முருகன்    (ஆ) திருமால்   (இ) இந்திரன் 
4. தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது 
   (அ ) நொச்சி       (ஆ) தும்பை       (இ) காஞ்சி 
5. ஆசிரியப்பாவின்  ஈற்று ச்சீர் ------------- முடிவது சிறப்பு 
  (அ ) ஆகாரத்தில் (ஆ) ஏகாரத்தில் (இ ) ஒகரத்தில்
                                                   
                                                            பகுதி - 2

கோடிட்ட இடத்தை நிரப்புக:

  6. கடலை இச் சொல்லில் பயின்று வரும் குறுக்கம் ----------------
  7. இது  செவ்வாயா ? என்னும் வினாவிற்கு 'வயிறு  வலிக்கும்'
     எனக் கூறுவது -----------
  8.மலரன்ன சேவடி இச் சொல்லில் அமைந்துள்ள உவம உருபு --------
  9.'பொற்குடம்' இச்சொல்லில் அமைந்துள்ள புணர்ச்சி --------
10. தாமரை என்பது --------- தினைகுரிய பூ

                                                         பகுதி - 3

11. வல்லினம் மிகா இடங்களுள் ஒன்றை சான்று தந்து விளக்குக.
12. உவமையை உருவகமாக மாற்றுக.
      மதிமுகம்
13. தொகைச் சொல்லை விரித்து எழுதுக
      முப்பால்
14. நேற்று மழை பெய்தது; அதனால் எரி குளங்கள் நிரம்பின -
      கலவைதொடராக  மாற்றுக
15. கீழ் காணும் தொடரிலுள்ள ஒருமை, பன்மைப் பிழைகளை நீக்கி எழுதுக
      வயது வந்தோர்க்கும் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்கப் பட
      வேண்டுமென அம்பேத்கர் கூறியதை நாடுகள் புகழ்ந்தது
16. கீழ் காணும் தொடரிலுள்ள சந்தி பிழைகளை நீக்கி எழுதுக.
      மேடை பேச்சு மிகுந்த பயனை தரவல்லது
17. கீழ் காணும் தொடரிலுள்ள வழுஉச் சொற்களை நீக்கி எழுதுக.
      வலது பக்கச் சுவற்றில் எழுதாதே .
18. கீழ் காணும் தொடரிலுள்ளபிறமொழிச் சொற்களுக்கு உரிய தமிழ்ச்
       சொற்களை எழுதுக
       இந்த ஷர்ட் மிகவும் காஸ்ட்லியானது  
19.கீழ் காணும் உரைப்பகுதிக்குப்  பெருத்தமான நிறுத்தர்குறியிட்டு எழுதுக
      ஓட்டுனர் நடத்துனர் முதலான பணிகளுக்கும் உடற்கூறுத் தகுதி
       உடையவர்கள் மட்டுமே சேர இயலும். 
20.கீழ் காணும் மரபு தொடர் குறிக்கும் பொருளை எழுதுக.
      கானல்நீர்

                                                    பிரிவு  - II
                                          (மதிப்பெண்கள் : 10)

கீழ்காணும் வினாக்களுக்கு எவையேனும் ஐந்தனுக்கு விடியளிக்க    5 x 2 = 10

21. ஐகாரகுருக்கத்தை எடுதுகாட்டுடன் விளக்குக
22. குறிப்பு என்பதனை எடுதுகாட்டுடன் விளக்குக
23. ஐயவினா  எடுதுகாட்டுடன் விளக்குக
24. பைங்கூழ் எவ்வாறு புணரும்
25. பகுபத உறுப்பிலக்கணம் தருக போற்றி
26. அன்பின் ஐந்திணை என்பவை யாவை ?
27. வாகைதிணை  என்பது யாது ?

                                                             பிரிவு - III
                                                     ( மதிப்பெண்கள் - 50)
                                                      பகுதி - 1
28. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் தருக .
29. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
      துப்பாய தூவும் மழை - இதில் பயின்றுள்ள  அணியை விளக்குக
                                                          அல்லது
      தற்குரிபேற்ற அணியை சான்றுடன் விளக்குக
30. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வாரை
      எல்லாருஞ் செய்வர் சிறப்பு      -   அலகிட்டு வாய்ப்பாடு தருக

                                                      பகுதி -2
கீழ்காணும் வினாக்களுக்கு எவையேனும் இரண்டிற்கு ஒவ்வொன்றிற்கும் அரைப்பக்க அளவில் விடியளிக்க.

31. தமிழகத்தில் நூலகத் துறையின் வளர்ச்சி பற்றிக் கட்டுரை  வரைக
32. அண்ணா எழுதிய கடிததின் கருத்துக்களைச் சுருக்கி எழுதுக
33. கமலநாதன் எவ்வாறு மனம் திருந்தினான் என்பதனை விளக்குக

                                                       பகுதி - 3
34.  கீழ்காணும் பத்தியில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களைத்
       தமிழாக்கம்  செய்க
     (அ) சுரேஷ் வாட்  ஹேப்பண்ட்? ஏன்  லேட்டா வர்ரை?  வழியிலே ஒரே
             டிராபிக் ஜாம் டா, அதனாலதான் லேட். சரி சரி பஸ் எத்தனை மணிக்கு
             வரும்? டிக்கெட் கிடைச்சுதா? பஸ் டென் தேர்டிக்கு தான் வரும்.லாஸ்ட்                வீகே ரிசர்வு செய்தாச்சி
      (ஆ)கீழ் உள்ள அரபு எண்களைத் தமிழ் எண்களாக மாற்றி எழுதுக
              52,   76,  183,  194

35.  கீழ்காணும் ஆங்கில உரைப் பகுதியைத் தமிழாக்கம் செய்க.
     (அ ) Schools do not stop with teaching the children the lessons alone. They do more. It is in the schools
              that the boys and girls form some regular habits. They learn to behave in an orderly way. They are
              corrected whenever they go wrong.
     (ஆ) கீழ்காணும் ஆங்கிலப் பழமொழிகளில் எவையேனும் இரண்டனுக்கு
              இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.
            (1) Every cock will crow upon his own dunghill.
            (2) The mills of god grind slow but sure.
            (3) Even a pin is good for something.
            (4) Take time by the forelock.
            (5) Live and let live
36.  கீழ்காணும் வினாக்களுள் ஒன்றனுக்கு விடியளிக்க.
       (அ) தேர்வுக்கு சென்று கொண்டிருக்கிறாள் திவ்யா   அப்போது சாலையில்
               ஒரு பெண் மயங்கி கிடக்கிறாள் சாலையில் வேறு யாரும் இல்லை
              திவ்யா வுக்கோ தேர்வுக்கு மணியாகி விட்டது அப்போது ....
                                                                      
                                                                       அல்லது

       (ஆ) கீழ்காணும் தலைப்பில் எட்டு வரிகளுக்குக் குறையாமல் கவிதை
                ஒன்று எழுதுக
                                                      இயற்கை  அல்லது மழை

                                                            பகுதி  - 5

37. கீழ்காணும் பாடலின் திரண்ட கருத்தை எழுதி, அப்பாடலில் அமைந்துள்ள
      ஏற்புடைய நயங்களில் ஏதேனும் ஐந்திணை எழுதுக.
                                    முட்புதர், நெருஞ்சி, கள்ளி
                                         முன்னரண், ஒற்றைப்பாட்டை
                                    உட்புகும் வாயில், தூண்கள்
                                        உயர்மரம், அம்ம ரத்துக்
                                   கொத்துப்பூ காற்றி லாடும் 
                                       கொடிகளாம், வெய்யோன், திங்கள்
                                   உட்புக வொண்ணாத் துய
                                      மரகத கோட்டை காடே!


                                                                                                          வாணிதாசன்
                                                                      பகுதி - 6

38. வங்கி கணக்கில் பணம் செலுத்தும் படிவத்தை நிரப்புக. பெயர் நிரப்பும் 
      இடத்தில் உமது பதிவு எண்ணை மட்டும் எழுதுக

                                                                     பகுதி  - 7

39. கீழ்காணும்வாழ்வியல் சூழலை படித்து அது குறித்த வினாக்களுக்கு
      விடையளிக்க
   
பாண்டியன் ஒவ்வொரு தேர்விலும் அறுபது மதிப்பெண்களுக்கு குறையாமல் பெறுவான். ஆனால், அவன் தந்தை அம்மதிப்பெண் போதாது என்றும், மேலும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்.
அதிக மதிப்பெண் பெறுவதற்காக அவனைத் தனிபடிப்புககும் அனுப்புகிறார்.
தனிபடிப்புச் சொல்லித்தருபவரின் பழகுத்தன்மை, அவனுக்கு பிடிக்கவில்லை. வீட்டில் சொன்னால் தனிபடிப்புக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இவ்வாறு கூறுகிறான் என்று நினைப்பர் என மனத்துயரம் கொள்கிறான் .

1. பாண்டியன், தன்  சிக்கலுக்கு எப்படி தீர்வு காண்பான் ?
2. நீங்கள் பாண்டியனாக இருந்தால் என்ன செய்வாய் ?
3. இச்சூழலில் நாம் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் திறன் என்ன ?

40.  கீழ்காணும் சூழலை படித்து  விடியளிக்க.

"யாழினி ! நீ ஏன் பெயர் கொடுக்கவில்லை ?" என ஆசிரியர் கேட்ட வினாவிற்கு ,விடை என்ன கூறுவது என்று தெரியாமல் நின்றாள்.'நாளை ஒருநாள்தான் இருக்கிறது,எண்ணி முடிவு சொல் ',என்று கூறியவாறே ஆசிரியர் வகுப்பில் இருந்து வெளியே சென்றார் .                      

   "யாழினி ,உன்மீது நாங்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம் .உன் அழகான கையெழுத்தும் ,செறிவான கருத்தும் கட்டுரைப்  போட்டியில் உனக்குப் பரிசு பெற்றுத் தருமல்லவா ?ஆனால் ,நீயோ போட்டியில் கலந்துகொள்ள மறுக்கிறாய் .என்ன காரணம் ?"என்று அவளுடைய தோழியர் வினவினர் .
   
      "எனக்குப் போட்டிகளில் கலந்துகொள்வது என்றாலே மிகவும் அச்சமாக உள்ளது .நீங்கள் நினைப்பதுபோல் என்னால் சிறப்பாகச் செய்ய முடியுமா ? என்று தெரியவில்லை. என் கட்டுரைக்குப் பரிசு கிடைக்கவில்லை என்றால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது "என்று யாழினி அவர்களுக்குப் பதிலளித்தால் .

நீங்கள் யழினியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?

இந்தநிலையில் யாழினி , தன் மனவெழுசிகளை எவ்வாறு
கட்டுபடுத்துவாள்?


                                                            பிரிவு ​ - IV

                                                      (மதிப்பெண்கள் :20)
                                                               பகுதி -1

 40. கீழ்காணும் வினாக்களுள் ஒன்றனுக்கு விடியளிக்க.
 
 (அ )குடிநீர் வசதி வேண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையருக்குக் கூட்டு விண்ணப்பம்  எழுதுக.

                                                             (அல்லது)

  (ஆ )நீவீர் கண்டு களித்த இடம் குறித்து உமது நண்பனுக்கு ஒரு கடிதம் வரைக .


                                                               பகுதி -2


  41.கீழ்காணும் வினாக்களுள் ஒன்றனுக்குக் குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில்  கட்டுரை  எழுதுக. தலைப்பு ஒன்று தருக .
    
    (அ ) சுற்றுச்சூழல் சீர்கேடு - காற்று மாசு - நீர் மாசு - நிலம் மாசு - ஒலி மாசு -
              தவிர்க்கும் முறைகள்  - மாணவர் பங்கு
                                                                              (அல்லது)


  (ஆ) ஊரின் அமைப்பு  - வரலாற்றுச் சிறப்பு  -  சிற்பங்களின் அழகு -
           பாதுகாக்கும் முறை - நமது கடமை . 
      
   
                                                              
                                                              -------------------------------

     
  
                                                                  
       

          

                                   





No comments:

Post a Comment